நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

ஞாயிறு, 20 நவம்பர், 2016

கேள்வி - பதில்


கேள்வி பதில்                                                      

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
      பதில்: அவரது கடைசி போரில்...


2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
      பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....


3. கேள்வி: ரவி ஆறு எந்த மாநிலத்தில் பாய்கிறது?
     பதில்: திரவம்


4. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
       பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.



5. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
      பதில்: இன்னொரு பாதி?


6. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
      பதில்: கல் ஈரமாகி விடும்.


7. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
      பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.


8. கேள்வி: ஒரு கையால் யானையை எப்படி தூக்க முடியும்?
      பதில்: ஒரு கை தான் என யானைக்கு தெரியாதே.


9. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
      பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.


10. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
      பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.


11. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
       பதில்: திருமணம் தான்.


12. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
        பதில்: தேர்வு தான்.