[[]]]][[[ தன்னம்பிக்கை வரிகள்]]]]]]]]]]]]]]]
1.எதற்க்காகவும் காத்திருக்காதே..
உன்னால் முடிந்த நல்ல செயல்களை
செய்துமுடி..யாரையும் நம்பி
காலத்தை தொலைக்காதே!
2.தேவையில்லாத விசயத்தை பற்றி
யோசித்து உன் சக்தியை சிதற
விடாதே..மாறாக அமைதியுடன்
நல்லசெயலில் ஈடுபடு!
3.உங்களிடம் போட்டி பொறாமை
இருந்தால் உடனே விட்டுவிடுங்கள்.
எதையும் பொறுத்துக் கொள்ளும்
மனப்பக்குவத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள்.பொறுமையாக
இருந்தால் உலகம் உங்கள்
காலடியில் இருக்கும்.
4.இந்த வாழ்க்கை இருப்பது இன்னும்
சில வருடங்களே..ஆதலால் ஏதாவது
நல்ல லட்சியத்தை கொண்டிரு..
அதற்காக மட்டும் உன் வாழ்க்கையை
அர்ப்பணி.
5.மற்றவர்கள் எதை வேண்டுமானாலும்
நினைக்கட்டும்..நீ உன் ஒழுக்கத்தில்
தவறாமல் இரு.அதுவே உன்னை
வெற்றி பெற செய்யும்.
6.யாரையும் தீயவன் என்று சொல்லாதே..நீ நல்லவன் இன்னும்
நல்லவனாக இரு என்று சொல்லுங்கள்!
7.எப்போதும் எதற்க்காகவும் பயப்படாதீர்கள்..ஒரு சிங்கத்தை
போன்ற துணிச்சல் வேண்டும்.
கோழைத்தனம் என்பது இருக்கவே
கூடாது!
8.தைரியத்துடன் வேலை செய்து
கொண்டே போ..பொறுமையோடும்
உறுதியோடும் வேலை செய்வதுதான்
வெற்றிக்கான வழி!
9.நான் மரணம் வரும்வரை வேலை
செய்வேன் என்று இருங்கள்..இந்த
மாதிரியான மனநிலைதான்
உங்களுக்கு எப்போதும் தேவை!
10.தைரியம் மிக்க இளைஞர்களே
நீங்கள் அனைவரும் மகத்தான
காரியத்தை செய்வதற்காக
பிறந்துள்ளீர்கள் என்று நம்புங்கள்!!