யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும்... அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள்... வாழ்க்கை வரமாகும்...
▪️இழுத்துப் புடிச்சு துன்பப்படுவதை விட, விட்டுட்டுப் போறது எவ்வளவோ மேல்... சில உறவுகளையும் கூட...
▪️ஆயிரம் படிப்புகளில் விழித்துக் கொள்ளாத மனம்... வாழ்க்கை எனும் படிப்பில் ஒரே ஒரு அனுபவத்திலே விழித்துக் கொள்ளும்...
▪️உங்களை காயப்படுத்தியவற்றை திரும்பத் திரும்ப யோசிப்பதால், அவை ஒருபோதும் உங்களை சிரிக்க விடாது...
▪️வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் துன்பங்கள் நம்மை புண்படுத்துவதாக நினைக்கக்கூடாது... அவை நம்மை பண்படுத்துவதாகவும் இருக்கலாம்...
▪️இப்போதெல்லாம் யாரும் யாரையும் நல்லவனா... கெட்டவனா... என்று பார்ப்பதில்லை... நாளைக்கு இவன் நமக்கு தேவைப்படுவானா, மாட்டானா என்று தான் பார்க்கிறார்கள்... எதிலும் ஆதாயத்தை தேடுவதே மனித இயல்பாகிவிட்டது...
▪️சண்டையில் ஒருவர் தான் வெல்ல முடியும்... சமாதானத்தில் இருவரும் வெல்ல முடியும்...!
பூமியில் வாழும் காலத்தில் மனிதன்
மனிதனாக வாழ வேண்டும்... பிறக்கும் போது எதுவும் கொண்டு வரவில்லை..
ஆனால் இறக்கும் போது நல்லவன் கெட்டவன் என்ற படத்தை பெற்று செல்கிறார்கள்....