நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

வெள்ளி, 11 நவம்பர், 2022

தாடியில் இருக்கும் அறிவு



ஒரு சமயம் ஸ்பெயின் நாட்டு அரசர்,இளைஞன் ஒருவனை டென்மார்க் நாட்டு தூதுவராக அனுப்பினார்.
டென்மார்க் மன்னர் அந்த இளைஞனை பார்த்து "ஸ்பெயின் நாட்டில் மனிதர்களே இல்லை போலிருகிறது .
அதனால் தான் தாடி முளைக்காத சிறுவனை எனது நாட்டிற்க்கு தூதுவராக அனுப்பி இருக்கிறார்!"என்று கிண்டலாக கூறினார்.
அதை கேட்ட அந்த இளைஞன் டென்மார்க் மன்னருக்கு சரியான பாடம் கற்பிக்க எண்ணினான் .
உடனே அவன்,"அரசே அறிவு என்பது தாடியில் தான் இருக்கிறது என்ற தங்களின் கருத்து எமது அரசருக்குத் தெரியாது.தெரிந்திருந்தால் எனக்கு பதிலாக ஒரு வெள்ளாட்டை இங்கு தூதுவராக அனுப்பிருப்பார் .
அதை கேட்டதும் டென்மார்க் மன்னரின் முகம் சுட்ட கத்திரிக்காய் போல் சுருங்கிவிட்டது.