எந்தளவு மற்றவர்களை புரிந்து கொள்கிறீர்களோ அந்தளவு கொஞ்சம் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
உங்களை சுற்றி இருப்பவர்களை நான்கு விதமாக பிரிக்கலாம்,
1. நீங்கள் சந்தோசமாக வாழனும். வெல்ல வேண்டுமென நினைப்பவர்கள்.
2. உங்களை வீழ்த்த வேண்டுமென நினைப்பவர்கள்.
3. நீங்க எப்படி இருந்தா எனக்கென்ன என்று இருப்பவர்கள்.
4.உங்களையே தெரியாதவர்கள்.
இதிலே முக்கியமாக கவனிக்க வேண்டியது, முதலாவது வகையினர் நிறையப்பேர் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்று அர்த்தம்.
எந்தவொரு தனி மனிதனுக்கும் உண்மையான முதல் வகையினர் 10 பேரைத் தாண்ட முடியாது.
நிறையப் பேர் இருப்பதாக நீங்கள் நம்பினால், நிறைய இரண்டாம் வகையினர் உங்களை ஏமாற்றிமுதல் வகையினர் போல நடித்துக்கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம்.
எந்தளவுக்கு இரண்டாம் வகையினரை உங்களால் ஆரம்பத்திலேயே இனம்காண முடிகிறது அந்தளவு உங்கள் வாழ்ககை நிம்மதியாக நகரும்.
அப்படிப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண முடியும்?
1.உங்களை அளவுக்கு அதிகமாக புகழ்வார்கள்
2.உங்களுக்கு பயன் தருமென நிறைய அட்வைஸ் கொடுப்பார்கள்
3. தனக்கு பிரச்சினையில்லை மற்ற ஆட்கள் சொனார்கள் என உங்களைப்பற்றி தவறாக சொல்வார்கள்
4.மற்றவர்களிடம் உங்களைப்பற்றி தவறாக பேசுவார்கள்.
இந்த நான்கில் ஒன்றை ஒருவர் அளவுக்கதிகமாக செய்கிறார் என்றால், அவரோடு கவனமாக இருங்கள்.
-பேஸ் புக் சாமியார்-