நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல....
காலையில் வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும்போது , மனைவியை எதிரில் நடந்து வரச்சொல்வதன் பின்னால், எவ்வளவு பெரிய விஞ்ஞான காரணம் இருக்கிறதென்று, நமக்கெல்லாம் தெரியாமல் போய்விட்டது!
நினைத்தாலே உடல் சிலிர்க்கின்றது.
வெளியுலகில் பல துன்பங்கள், சோதனைகள், போராட்டங்கள் என எது வேண்டுமெனிலும் வரலாம். ஆக அதையெல்லாம் அந்த ஆண் சமாளித்தாக வேண்டும்.
எதையும் தாங்கும் துணிவு வேண்டும். சமாளிக்கும் திறன் வேண்டும்.
அதற்கான ஒரே வழி..
கிளம்பும் போதே மனைவியை எதிரில் நடந்து வர செய்வது.
ஆம்.
அதன்மூலம் அவனது நாடி, நரம்பு, சதை, புத்தி என எல்லாவற்றிலும் அவன் உணர்வது யாதெனில்..
மவனே இதைவிட உனக்கு என்ன, பெரிய பிரச்சனை இந்த உலகத்துல வந்துடப்போகுது?
எந்த பிரச்சனையா இருந்தாலும் அசால்ட்டா முடி!
😂😂😂😂😂