• புதிய ஊரில், புதிய மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
• யாரையும் ஏமாற்றி பிழைத்தவன். இப்பொழுது நான் நல்லவன் என்று அவனே சொல்லிக் கொள்பவன்.
• அவனிடம் சொத்து சுகம் இருக்கிறது. நல்லவன் என்று யாரையும் நம்பி விடாதீர்கள். சாதாரணமானவர்கள் ஏமாற்றுபவர்கள் போலவே சொத்து சுகம் இருப்பவனும் ஏமாற்றுக்கின்றான்.
• அரசியலில் இருப்பவன், போலீஸ், கோர்ட், வக்கீல் போன்றவற்றிற்கு நெருங்கிய தொடர்பு இருப்பவர்களுடன் நமக்கு தொடர்பு இருக்கக் கூடாது. எந்த சிறிய பிரச்சினைக்கும் போலீஸ் வரை இழுத்துச் சென்று பெரிதாக்கி விடுவார்கள்.
• மிகப் பெரிய பணக்காரனுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள கூடாது (வியாபாரம் கொடுக்கல் வாங்கல் விதிவிலக்கு)
• "உனக்கென்ன பெரிய ஆள்" என்று சொல்பவனிடம் கவனமாக இருக்க வேண்டும். காசு கொடுத்தால் வராது. "இதெல்லாம் உனக்கு ஒரு பெரிய விஷயமா," என்பான்.
• நல்லவர்கள், ஆனாலும் அடிமுட்டாளாக இருப்பார்கள். திருடர்களை விட முட்டாள்கள் ஆபத்தானவர்கள். அவர்கள் முட்டாள்தனமாகச் செய்வதற்கும் நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
• நேரிலேயே பார்த்து பழகாமல், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மட்டும் பழகியவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
• மற்றபடி நாம் அருகில் இருக்கும் ஒருவருக்கு ஏதாவது ஒரு வேலை சொன்னால், அதை சரியாக அவர்கள் செய்து விட்டார்களா என்று பாருங்கள்.
• வெளி மாநில, வெளியூர் மனிதனுக்கு உன் மேலோ, உங்கள் ஊரின் மேலோ எந்த விதமான அன்போ பாசமோ இருக்காது. அவர்களை முழுமையாக நம்பாதீர்கள்.
• அளவுக்கு மிஞ்சி செலவு செய்பவன். என்றாவது நம் தலையில் கை வைப்பான்.
• புதிய வேலைக்காரன், புதிய வேலைக்காரி.
• மற்றபடி நம்மை நாம் என்னென்ன செய்து கொண்டு இருக்கின்றோம் என்று கவனித்துக் கொண்டே இருக்கும் வேலைக்காரனிடம் கவனம் தேவை.