நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ஒரு பெரிய ஆலமரம் கீழே எந்த செடியும் வளராது

ஒரு பெரிய ஆலமரம் கீழே எந்த செடியும் வளராது. சிவாஜி மகன் ராம்குமார் குரல் அப்படியே சிவாஜி குரல் போல் இருக்கும். ஆனால் படிக்காத சிவாஜி பேசிய வசனங்கள், Convent School படித்த ராம்குமார் பேசவில்லை!

MSV மகன் வரவில்லை, இளையராஜா வந்தார். இளையராஜா மகன் கார்த்திக் ராஜா நல்ல Talent. ஆனால் AR ரெஹ்மான் வந்தார். நாளை AR ரெஹ்மான் மகன் மகள் வராமல் வேறு ஒருவர் வருவார்!

தந்தை மிக பெரிய மனிதராக இருந்தால், மகன் அவரை மிஞ்சுவது என்பது இந்த உலகில், வரலாற்றில் எங்கும் நடந்தது இல்லை.

எனக்கு தெரிந்து ஒரே ஒரு விதி விலக்கு, மாமன்னர் ராஜ ராஜ சோழன். மகன் ராஜேந்திர சோழன், தந்தையை விட பெரிய சாம்ராஜ்யம் கண்டார்!

எல்லோரும் ராஜேந்திர சோழனாக முடியாது, என்பதுதான் உண்மை!

இளையராஜா இவ்வளவு பெரிய ஆளா ஆனதற்கு, அவர் கஷ்டப்பட்டுதும் காரணம். சிவாஜியும் எம்ஜிஆரும் பெரிய ஆளாக மாறியதற்கு, அவர்கள் சாப்பாடுக்கே கஷ்டப்பட்டதும் ஒரு காரணம்.

அவர்கள் பட்ட கஷ்டத்தை, அவர்களின் மகன்கள் படாமல் தந்தைகள் பார்த்துக்கொண்டார்கள். அதுதான் அவர்கள் செய்த தவறு!

இளையராஜா சிவாஜி கணேசன் போன்றவர்கள், வரலாற்றில் இடம் பிடிப்பதற்கு காரணம் திறமை உழைப்பு மட்டுமல்ல, அவர்கள் பட்ட கஷ்டங்களும் ஒரு காரணம் என்று சொல்வேன்.

எனக்கு கஷ்டங்களைப் பார்க்க பார்க்க தான், மன உறுதி அதிகமானது. நான் செல்லக் குழந்தையாக என் தாயின் மடியில் இருந்த வரை, எனக்கு கஷ்டம் தெரியவில்லை. இப்போது நான், கஷ்டங்களை பார்த்தத பின், என் துணிகளை நானே சலவை செய்கிறேன், சமையல் செய்யக் கற்றுக் கொண்டேன், எல்லா இடங்களுக்கும் நடக்கிறேன், சைக்கிள் ஓட்டுகிறேன். கிட்டத்தட்ட ஒரு 5000 ரூபாய் ஒரு மாதம் மிச்சம்!

ஆனால், திரைத்துறையை சேர்ந்தவர்கள், குறிப்பாக அதிகம் கஷ்டத்தை பார்த்த, சிவாஜி போன்றவர்கள், தங்கள் பட்ட கஷ்டத்தை தங்கள் மகன்கள் படக்கூடாது என்று, நினைத்தது, அவர்களை ஒரு Mediacore மனிதர்களாக மாற்றி விட்டது.

மார்வாடி சமூகத்தில் ஒரு வழக்கம் உண்டு. பணக்காரத் தந்தை தன் மகனை, இன்னொரு பணக்கார மார்வாடி இடம், சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு அனுப்புவார். ஒரு இரண்டு மூன்று வருடம், கடுமையான பயிற்சி! மகன் கஷ்டங்களை எல்லாம் பார்த்த பிறகு கடையை ஒப்படைப்பார்!

திருபாய் அம்பானி பட்ட கஷ்டத்தை, அவர் மகன்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானி பார்க்கவில்லை. சத்ரபதி சிவாஜி மகன் சிவாஜி போல. முகலாய மன்னர்களில் மிகப் பெரிய சாம்ராஜ்யம் வைத்திருந்தவர் அவுரங்கசீப்! அவர் மகன்கள் யாராலும், முகலாய சாம்ராஜ்யத்தை காப்பாற்ற முடியவில்லை.

சுருங்கச் சொன்னால், Comfort Zone னை விட்டு காலம், அல்லது கடவுள் சிவாஜி மற்றும் இளையராஜா போன்றவர்களை, வெளியே வைத்தது, அவர்களை வெற்றியாளர்களாக மாற்றியது. அவர்களது பிள்ளைகள், Comfort Zone னை விட்டு வெளியே வரவே இல்லை.

Nepotism என்னும் வாரிசு வளர்க்கும் மட்டமான செயல், இந்தியாவில் அரசியல் மட்டும்தான் உண்டு. திரைத் துறையைப் பொருத்தவரை, திறமையற்ற தன் பிள்ளைகளை கொண்டு வருவது என்பது, ஹிந்தியில் பாலிவுட்டில் மட்டும்தான் உண்டு.

ஆனால் எஸ்ஏ சந்திரசேகரன், மற்றும் மணிரத்னம் தமிழ்நாட்டில், குறிப்பாக திரைத்துறையில், ஜனநாயகத்தைக் கொன்று, வாரிசுகளை கொண்டு வந்தார்கள்.தவறு, திணித்தார்கள். காலப்போக்கில் மக்கள் தளபதி என்றும், சின்ன தளபதி என்றும் பணக்கார பிள்ளைகளை ஏற்றுக்கொண்டர்கள்.

மணி ரத்னம், முத்துராமன் சிவாஜி பிள்ளை பிரபு கார்த்திக்கை அக்னிநட்சத்திரம் படத்தில் நடிக்க வைத்தார். நாகேஸ்வரராவ் மகன் நாகார்ஜுனா, மலையாள நடிகர் மம்முட்டி மகன் தேடிப்பிடித்து தமிழ் படத்தில் நடிக்க வைத்தார். பிற்பாடு கார்த்திக் மகன், ராதா மகள் என்று பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் அவர் படத்தில் நடிக்க முடியும். நாளை ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்த மகளை கூட மணிரத்னம் தமிழ் படத்தில் கதாநாயகி ஆக்குவார். ஆனால் ஒரு சாதாரண தமிழ் பெண்ணை நடிக்க வைக்க மாட்டார்!

இளையராஜா, தேவையில்லாமல் மணிரத்னத்தை பகைத்துக் கொண்டார். இல்லாவிட்டால், மணிரத்னம் இளையராஜா மகன்களை, ஏ ஆர் ரஹ்மானுக்கு பதிலாக, ரோஜா படத்தில் இசையமைப்பாளராக ஆக்கியிருப்பார்!

என்ன இருந்தாலும், ஏ ஆர் ரகுமான், வேறொரு வழியில், இளையராஜாவை மிஞ்ச வந்திருப்பார். He is destined to success. மணிரத்னம் வெறும் கருவி. மணிரத்னம் கொண்டு வந்த ஒரே, சாதாரண மனிதர் ஏ ஆர் ரஹ்மான். ஆனால் அவர் தந்தையும் ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.