நீங்கள் படித்துக் கொண்டிருப்பது...................................

சனி, 8 அக்டோபர், 2022

நாட்டு நடப்புக்கள்

ஒரு நிறுவனத்தின் மேனேஜர் பணியில் இருந்த மூன்று ஊழியர்களை வரவழைத்து  ​​2+2=5 தானே? என கேட்டார்.
 
முதல் நபர்: ஆம், அதேதான்' என்று பதிலளித்தார்.

இரண்டாம் நபர்: ஆம், அத்தோடு 1 ஐ
சேர்த்தால் 5 தான்' என்று பதிலளித்தார்.

மூன்றாம் நபர்: இல்லை, இது தவறான விடை, 4 தான் சரியான விடை' என்றார். 

அடுத்த நாள் ஊழியர்கள் மூன்றாவது நபரை பணியில் காணவில்லை, அது பற்றி விசாரித்த போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இது கண்டு வியந்து போன துணை மனேஜர்: மதிப்பிற்குரிய மனேஜரே! மூன்றாவது ஊழியரை ஏன் பணி நீக்கம் செய்தீர்? தெரிந்து கொள்ளலாமா? என கேட்டார்.

அதற்கு மனேஜர்: முதல் நபரை பொறுத்தவரை, அவன் ஒரு பொய்யன். அவன் ஒரு பொய்யன் என்பது அவனுக்கும் தெரியும். இந்த வகையினர் நமக்கு தேவை.

இரண்டாவது நபரை பொறுத்தவரை அவன் புத்திசாலி, அவன் புத்திசாலி என்பது அவனுக்கும் தெரியும். இந்த வகை நபர்களும் நமக்கு தேவை.

மூன்றாவது நபரைப் பொறுத்தவரை, அவன் நேர்மையானவன், நியாயம் பேசுபவன். இந்த வகை நபர்களை வைத்து காலத்தை ஓட்டுவது கஷ்டம்! நம்மால் இவர்களை சமாளிக்க முடியாது' என்றார். 

இப்போது அந்த மனேஜர் அந்த துணை மனேஜரிடம்: 2 + 2 = 5 தானே? நீ சொல் பார்ப்போம்' என்றார்.

அதற்கு துணை மனேஜர்: ஸார் நீங்கள் அனுபவம் வாய்ந்த மனேஜர். உங்களுக்கு நான் விளக்கம் சொல்வது  அழகல்ல!
நீஙகள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் சரியான விடை!' என்றார்.

அதற்கு அந்த மனேஜர்: “இந்த வகையினர் சுத்தமான நயவஞ்சகர்கள், இவர்கள் மிகவும் வரவேற்கப்பட்டவர்கள், இவர்கள் கட்டாயம் நமக்கு தேவை.' என்றார்.

இதுதான் நாட்டின் நடப்புக்கள். இதுதான் கசப்பான உண்மை,  திருடர்களுக்கு இடமுண்டு, நியாயவாதிக்கு இடமில்லை. நீதி நேர்மைக்கு கதவுகள் மூடப்படுகின்றன.கள்ளம் கபடத்துக்கு கதவுகள் திகறக்கப்படுகின்றன.